திருச்சி, : திருச்சி மக்களவை தொகுதியில் 71.11 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
திருச்சி மக்களவை தொகுதி வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் காலை 7மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம் 1,497 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இத்தொகுதியில் 6,88,822 ஆண்கள், 6,97,576 பெண்கள், 83 இதரர் என மொத்தம் 13,86,381 பேர் வாக் களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இதில் 6சட்டமன்ற தொகுதியில் 2 மணி நேர நிலவரப்படி மாலை 6 மணி வரை நடந்த வாக்குப் பதிவில், காலை 9 மணிக்கு 16 சதவீதம், 11 மணிக்கு 34.6, பிற்பகல் 1 மணிக்கு 46.25, 3மணிக்கு 56.8, 5 மணிக்கு 67.38 சதவீதம் ஓட்டு பதிவானது. மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 71.11 சதவீதம் பதிவானது.
திருச்சி மக்களவை தொகுதியில் மொத்தம் 71.11 சதவீதம் பதிவானது. கடந்த 2009 தேர்தலின் போது, திருச்சி மக்களவை தொகுதியில் 68 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. கடந்த மக்களவை தேர்தலைக் காட்டிலும் வாக்குகள், இந்த முறை 3.11 சதவீதம் அதிகளவில் பதிவாகியுள்ளது.
திருச்சி மக்களவை தொகுதி வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் காலை 7மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது. மொத்தம் 1,497 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இத்தொகுதியில் 6,88,822 ஆண்கள், 6,97,576 பெண்கள், 83 இதரர் என மொத்தம் 13,86,381 பேர் வாக் களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
இதில் 6சட்டமன்ற தொகுதியில் 2 மணி நேர நிலவரப்படி மாலை 6 மணி வரை நடந்த வாக்குப் பதிவில், காலை 9 மணிக்கு 16 சதவீதம், 11 மணிக்கு 34.6, பிற்பகல் 1 மணிக்கு 46.25, 3மணிக்கு 56.8, 5 மணிக்கு 67.38 சதவீதம் ஓட்டு பதிவானது. மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 71.11 சதவீதம் பதிவானது.
திருச்சி மக்களவை தொகுதியில் மொத்தம் 71.11 சதவீதம் பதிவானது. கடந்த 2009 தேர்தலின் போது, திருச்சி மக்களவை தொகுதியில் 68 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன. கடந்த மக்களவை தேர்தலைக் காட்டிலும் வாக்குகள், இந்த முறை 3.11 சதவீதம் அதிகளவில் பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் தேர்தல் நடந்து முடிந்து விட்டாலும், இதன் முடிவுகள் மே 16ம்தேதி தான் தெரிய வரும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி சிறிது நேரத்தில் யார் முன்னிலை என முடிவுகள் தெரியத் தொடங்கி விடும். இதில் பிற்பகலுக்குள் திருச்சி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் யார் என முடிவு தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படு கிறது.
No comments:
Post a Comment